Monday 6th of May 2024 02:11:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
மியான்மரில் ஆா்ப்பாட்டக்காரர் ஒருவா் இன்று சுட்டுக் கொலை!

மியான்மரில் ஆா்ப்பாட்டக்காரர் ஒருவா் இன்று சுட்டுக் கொலை!


மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலா் காயமடைந்தனர்.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடிக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இந்த அசம்பாவிடம் இடம்பெற்றது.

பொலிஸாரின் துப்பாக்கிக் குண்டு தலையில் தாக்கியதால் போராட்டக்காரர் உயிரிழந்ததாக வொய்ஸ் ஒப் மியான்மர் ஊடகத்தின் உதவி ஆசிரியர் லின் கைங் தெரிவித்துள்ளார். அத்துடன், தாக்குதலில் சில பலத்த காங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மாண்டலே நகர அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE